Friday, June 20, 2008

நான் உலவுகிறேன

எனது தனிமைகள் கழிகின்றன
யாரும் இல்லா இனிமைகளாக..
நினைவுகளின் சில பல மர்மங்கள்
நிகழ்வுகளாக தொடர்கின்றன.
வர்ணங்கள் இல்லா வெண்மையாக நான் உலவுகிறேன்
எனது மர்மப் பாதைகள் விலகுகின்றன
தெளிந்த நீரோட்டையில் எனது பாவங்கள் தொலைகின்றன.

பிரிவுகள்

நண்பர்களின்..
ஒரு கன நிகழ்வுகள் தினமும்
தொலைந்தவைகளாக மீண்டு வருகின்றன.

என் இருமனக்கண்களிலும் நித்திரைக் கனவுகளாக
காண்கிறேன் ...



என் மனதில் வருடங்கள் பல கழிந்தாலும்
உன்னைச் சந்தித்த அந்த சில நாள்கள்
என்னில் நிரந்தரமாக என்றும் இருக்கும் நீ இல்லாமலும்...

நண்பர்கள் என்னை மறந்தாலும் பிரிந்தாலும்
அவர்கள் அழித்த நட்பு பிரியவில்லை ...

Monday, May 26, 2008

மழலை சிரிப்புகள்..


விடுதலையான என் நினைவுகள்
உன் ரீங்காரமிடும் புன்னகைக்காக
காத்திருக்கின்றன.

மேகமாக நான் அலைகிறேன் மலைகளில்
என்னை உடைக்கும் மின்னலாக
உன் மழலை சிரிப்புகள்..

Tuesday, April 29, 2008

மழலை முகம்


உனது ஆறுநாள் புன்னகை
என் இருதயத்தின் ஒரு சிறு கீரல்..


நீ பேச முடியாத மௌனங்கள்
என்னுள் இன்னிசையாக..


உனது அழுகுரல்
என் மனதின் பிரதிபலிப்பு..


உனது மெல்லிய சிரிப்பு
எந்தன் ஜீன்களின் பரவசம்.

இனி...

இனி ஒரு சிந்தனை செய்வோம் 
உலகமக்களுக்கு ஒருவேளை 
உணவு கிடைக்கவேண்டுமென்று. 

இனி ஒன்று நினைப்போம் 
உலகில் உள்ள கடவுள்களும் மனிதர்களும் 
ஒன்றே என்று. 

இனி ஒன்று யோசிப்போம் 
உலகில் இயற்கையை அழிக்காமல் 
இருப்போம் என்று. 

இனி ஒன்று நினைப்போம் 
உலகில் மாற்றங்கள் நிகழ நாமும் 
காரணம் என்று. 

இனி ஒன்று நம்புவோம் 
உலகில் போர்கள் 
நிகழ கூடாதுதென்று. 

இனி ஒரு எண்ணம் எண்ணுவோம் 
உலகத்தில் அமைதி 
நிகழ வேண்டுமென்று

Friday, April 18, 2008

தனிமை




தனிமை
கருவறையிலும் கல்லறையிலும்
நீ இல்லாமல் தற்பொழுதும்..

காதல்..
தனிமையை கொண்டாட வரும் இனிமை...

நீ இருக்கும் பொழுது தெரியாத உனது நேசங்கள்
நீ இல்லாமல் இருக்கும் தனிமையில் மையல் இடுகின்றன.....

தனிமையை நான் கற்கிறேன்
எனது தோழர்கள் சந்திக்கவும் பிரியவும்...


தொடர்ந்து தோழர்கள் சேர்கிறார்கள் பிரிகிறார்கள்
நான் மட்டும் தனியே....

என்னை விட்டு எல்லோரும் பிரிகிறார்கள்
தனிமை மட்டும் என்னை பிரியாமல் தொடர்கிறது...

எனது அழுகுரல் ரீங்காரமாக என் மனதில் அழுந்த பதிகிறது
நான் அழுகிறேன் தனியே!
யாருக்கும்
தெரியாமல்...