Tuesday, April 29, 2008

இனி...

இனி ஒரு சிந்தனை செய்வோம் 
உலகமக்களுக்கு ஒருவேளை 
உணவு கிடைக்கவேண்டுமென்று. 

இனி ஒன்று நினைப்போம் 
உலகில் உள்ள கடவுள்களும் மனிதர்களும் 
ஒன்றே என்று. 

இனி ஒன்று யோசிப்போம் 
உலகில் இயற்கையை அழிக்காமல் 
இருப்போம் என்று. 

இனி ஒன்று நினைப்போம் 
உலகில் மாற்றங்கள் நிகழ நாமும் 
காரணம் என்று. 

இனி ஒன்று நம்புவோம் 
உலகில் போர்கள் 
நிகழ கூடாதுதென்று. 

இனி ஒரு எண்ணம் எண்ணுவோம் 
உலகத்தில் அமைதி 
நிகழ வேண்டுமென்று

No comments: