Tuesday, June 30, 2009

மலர்க்கவிதைகள்

என் குளிர்காலக் கனவுகள்
மறைகின்றன
நிகழ்கால நிஜங்களில்..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சிறு இடைவெளிகளில் உன்னை
காண்கிறேன்.
உன் இருகண்களில்
என்னை இழுக்கிறாய்..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உன் மலர்முகம் என்னை
மாற்றுகின்றன
என்னையறியாமல்..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சன்னல் முற்றத்தின் அறை
நிலா வெளிச்சம்
என் மனத்திரையில்
உன் மலர்முகம்..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

என் மனதில் முழுமதியின்
வெளிச்சமாக நீ தான்..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உன்னைப் பார்க்கையில்
தெரியாத கவிதைகள்
உன்னை நினைக்கையில்
வருகின்றன
என் மனமறியாமல்...

No comments: